Friday 7 November 2014

வாத்தியார் கொடுத்த விருதுகள்!!!


வாத்தியார் கொடுத்த விருதுகள்!!!
சிகரம் தொட்ட பதிவாளர், பதிவுத் திலகம், (Hit rate சும்மா எகிறிடுச்சே!!!) மதிப்பிற்கும், பிரியத்திற்கும் உரிய எனதருமை வாத்தியார் திரு.வைகோ அவர்கள் 2014 துவக்கத்தில் ஆரம்பித்த சிறுகதை விமர்சனப் போட்டியை எத்தகைய எதிர் விமர்சனத்திற்கும் இடமின்றி மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்து வெற்றிவிழா நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் சாதனைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் பெருமகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்! ஏதோ இந்தப் போட்டியை நானே நடத்தி முடித்ததுபோல ஒரு பெரு மகிழ்ச்சி எனக்குள்! அப்படி ஒரு நெருக்கத்தினை, (இதுவரை நேரில் பார்த்திராதபோதும்) மனதளவில் என்னிடம் ஏற்படுத்திவிட்டார்! கூட்டத்துல எட்டிப் பாக்கப்போனவனையே புடிச்சு மாப்பிள்ளையாக்கி மணையில உக்காரவச்ச கதையா VGK-13ல் விமர்சனப்போட்டிக்குள்ளார எட்டிப்பாத்து  நடுப்புற கொஞ்சம் (வலை)பக்கத்த காணும்கிறமாதிரி (எந்த காரணமாக இருந்தாலும்) எஸ்கேப் ஆகிவிட்டஎனக்கு(ம்) இரண்டு விருதுகள் கொடுத்துள்ளார்! இந்த மாபெரும் அங்கீகாரத்திற்கு எனது தலைவணங்கி இந்தப்பதிவில் எனது நென்சார்ந்த நன்றியை மீண்டும் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்! என்னோடு விருது பெற்ற சக பதிவர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
1. எட்டு முறைக்கு மேலாக பரிசு வென்றவர்களுக்கான கீதா விருதில் நான்காம் இடம் அளிக்கப்பட்டதற்கான அறிவிப்பு இணைப்பு இதோ!

  1. நான்கு முறை ஹாட்ரிக் வென்றதற்கான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி  விருதில் மூன்றாம் இடம் வழங்கப் பட்டதற்கான அறிவிற்பிற்குரிய இணைப்பு இதோ!
இந்த மாபெரும் வாய்ப்பினை நல்கிய திரு. வைகோ மற்றும் நடுவர் ஐயா திரு. ஜிவி அவர்களுக்கும் எனது நன்றிகள்! ஒவ்வொரு நிலையிலும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி என்னை வெளிக்கொணர்ந்த விஜிகே வாத்யாரையே இந்த விருதுகள் இரண்டும் உண்மையில் சேரும்!
என்றென்றும் அன்புடன்,
உங்கள் அன்பு,
 எம்ஜிஆர்---

6 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. //என்னை வெளிக்கொணர்ந்த விஜிகே வாத்யாரையே இந்த விருதுகள் இரண்டும் உண்மையில் சேரும்!//

    விருதும் விருதுத்தொகைகளும் உங்களுக்கே சேரட்டும் நண்பரே !

    இவ்விரு விருதுகளின் பெயர்களும் ”கீதா” + “ஸ்ரீ இராஜராஜேஸ்வரி” உண்மையிலேயே மிக அருமையாகவும், பெருமையாகவும்தான் அமைந்துள்ளன.

    எனக்கு இதுபோல பெயர்களில் யாரும் விருது வழங்கவில்லையே என என்னையே ஏங்க வைக்கும் பெயர்களாக அமைந்துள்ளன. :)))))

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    மேலும் மேலும் வாழ்க்கையிலும், எழுத்துலகிலும் வெற்றிபெற என் நல்வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன் VGK

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நண்பரே
    தொடருங்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ...பாராட்டுகள்

    ReplyDelete
  5. அன்புடையீர்,

    வணக்கம்.

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    மேற்படி பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள தங்களுக்கான பரிசுத்தொகை இன்று 10.11.2014 திங்கட்கிழமை தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தங்களுக்கான பணம் கிடைக்கப்பட்ட விபரத்தை தாங்கள் உறுதிசெய்து மேற்படி பதிவினில் ஓர் பின்னூட்டம் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன்.

    அவசரம் இல்லை. தங்களால் முடிந்தபோது, செளகர்யப்பட்டபோது உறுதி செய்தால் போதுமானது.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  6. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் நண்பரே!

    ReplyDelete