Sunday 23 March 2014
Tuesday 18 March 2014
Saturday 15 March 2014
ஒரு(க்)காலும் இல்லை!
ஒரு(க்)காலும் இல்லை!
கால் ஒன்றை இழந்தாலும்
காலனை நாடவில்லை.
நடப்பதில் உண்டு சிரமம்;
என்றாலும் கிடந்திடாது
நல்வழியே நடந்(த்)திடும்
இவரின் 'வைர' மனத்திடம்.
உடல் மாற்றுத் ‘திறனா’ளி
மனமோ மாறாத உழைப்பாளி!
ஊன்று(ம்)கோலும் சுழற்றும்
ஓ(ட்)டும் வண்டியின் சக்கரம்.
நெஞ்சுரத்தில் ஓ(ட்)டிடும்
தன் வாழ்க்கை சக்கரம்.
ஓடி ஓடி உழைத்திடவே
இரு கால் இவர்க்கில்லை
உழைக்காமல் ‘ஓட்டு’வதா?
ஒரு(க்)காலும் இங்கில்லை.
ரவிஜி..
(புகைப்படம் – நன்றி கூகிள்)
(உங்களின் தன்னம்பிக்கைக்கும் மன திடத்திற்க்கும்
தன்மானத்திற்கும் தலைவணங்குகிறேன் அண்ணா)
Friday 14 March 2014
Thursday 13 March 2014
Saturday 8 March 2014
Friday 7 March 2014
Thursday 6 March 2014
எங்கெங்கு காணினும்…!!!
எங்கெங்கு காணினும்…!!!
எங்கும் என்றும் எப்பொழுதும் எல்லோரையும்
அன்பு செய்ய வேண்டும் - இறைவனுக்கு நிர்பந்தம்!
தன் பொறுப்பில் என்றும் சறுக்காதிருக்கவே
ஆண்டவன் அனுப்பி வைக்கிறான் அம்மாக்களை
அம்மாக்கள் மகள் உருவமாய் பிறக்கிறார்கள்
அம்மாவாகி… அம்மம்மாவாகி… பெண்தெய்வமென
எங்கும் நிறைந்து அருவமாகியும் காக்கிறார்கள்!
ரவிஜி...
(புகைப்படம் : நன்றி கூகிள்)
(வானின்று எனை வாழ்த்தும் என் இரு அருமைத்தங்கைகளுக்கும் எனது அம்மம்மாவுக்கும் மகளிர் தினத்தில் எனது அர்ப்பணம்)
Subscribe to:
Posts (Atom)